வலிகள்
வலிகளை நேசிக்கிறேன் வலிகளை ரசிக்கிறேன் வலிகளை வேண்டுகிறேன் வலிகள் கவிதைகளாய் உருமாறுவதால்!
வலிகளை நேசிக்கிறேன் வலிகளை ரசிக்கிறேன் வலிகளை வேண்டுகிறேன் வலிகள் கவிதைகளாய் உருமாறுவதால்!
நிச்சயமாகிவிட்டது! மலர் வனம் வளர்க்கிறேன் முதலிரவில் பூவிதழ்கள் நாம் நசுக்க...
தென்னங்கீற்றுகள் கிச்சு கிச்சு மூட்டிட தென்றல் காற்று சிலிர்த்து சிரித்திட பூப்படைந்த பூக்கள் சில கனிந்தன!
உன் கைகோர்க்க என் கை நீட்டினேன் கண்டுகொள்ளாமல் முன் நடந்தாய் ஆறுதலாய் வருடிச் சென்றது காற்று!
ஒருதலைக் காதலியின் பதில் கிடைக்கா காதலன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாதானமே "மௌனம் சம்மதம்!"
பாசம் என்றெண்ணிப் பழகினேன் பாசாங்கு என்றுணர்ந்த பின்பும் பாவி மனம் வெறுக்க மறுக்கிறது!
"நேற்றிரவு கோரைப்பாயில் படுத்தாயா? கன்னத்தில் இத்தனை கோடுகள்!" அக்கறையாய் விசாரித்த தோழியிடம் எப்படி சொல்வேன் அவை உன் உதட்டு வரிகளின் தடமென்று!