Tag: கவிதை

காதல் நீர்

காதல் நீர்

சுடுதரை மேல் படர்ந்ததால் ஆவியாய் மாண்டது தண்ணீர் மேகமாய் மீண்டு வரும் சுடுதரையை மீண்டும் குளிர செய்ய தண்ணீர் கொண்டது காதலல்லவோ!

இதயம் உள்ளே

இதயம் உள்ளே

நல்லவேளை இதயத்தை இறைவன் உள்ளே வைத்தான்  இல்லையெனில் நித்தமும் நான் உனை நினைப்பதை  உலகு அறிந்திருக்கும்  நீயும் கூட!

கார்மேகம்

கார்மேகம்

மழை வரும் போல் இருந்தது உலர்துணிகள் எடுக்க மொட்டை மாடி விரைந்தேன் சென்ற நொடி சிலையானேன் கார்மேகக் குவியல் கவின் கண்டு எக்கணமும் வெடித்து விழ எத்தனித்த ...

வலிகள்

வலிகள்

வலிகளை நேசிக்கிறேன் வலிகளை ரசிக்கிறேன் வலிகளை வேண்டுகிறேன் வலிகள் கவிதைகளாய் உருமாறுவதால்!

மலர் வனம்

மலர் வனம்

நிச்சயமாகிவிட்டது! மலர் வனம் வளர்க்கிறேன்  முதலிரவில் பூவிதழ்கள் நாம் நசுக்க...

தென்னங்கீற்று

தென்னங்கீற்று

தென்னங்கீற்றுகள் கிச்சு கிச்சு மூட்டிட  தென்றல் காற்று சிலிர்த்து சிரித்திட  பூப்படைந்த பூக்கள் சில கனிந்தன!

கை நீட்டினேன் 

கை நீட்டினேன் 

உன் கைகோர்க்க என் கை நீட்டினேன்  கண்டுகொள்ளாமல் முன் நடந்தாய்  ஆறுதலாய் வருடிச் சென்றது காற்று!

மௌனம் சம்மதம்!

மௌனம் சம்மதம்!

ஒருதலைக் காதலியின் பதில் கிடைக்கா காதலன் ஒருவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்ட சமாதானமே "மௌனம் சம்மதம்!"

பூ

பூ

தன் மீது மோதியதால் காற்றைத் தன் வாசம் சுமக்க வைத்தது பூ!

பாசாங்கு

பாசாங்கு

பாசம் என்றெண்ணிப் பழகினேன்  பாசாங்கு என்றுணர்ந்த பின்பும் பாவி மனம் வெறுக்க மறுக்கிறது!

Page 1 of 4 1 2 4

Popular