இன்றும் படுத்தவுடன் உறங்கிவிட்டாள் துணைவி..
வீட்டுவேலைப்பளுவா, என்மேல் விருப்பம் இல்லையா இல்லை வேறெதுமா..
விக்கித்து படுக்கையில் புரண்டான் கணவன்..
சந்தேகம் தீர்த்திட சூளுரைத்தான்..
அதிகாலையிலே அவளுடன் எழுந்தான்..
அலுவலகத்திற்கு விடுப்பு விடுத்தான்..
அனைத்து வீட்டு வேலைகளையும் பகிர்ந்து செய்தான்..
அவளுடைய அலுப்பு உணர்ந்தான்..
அன்றிரவு பத்து மணி முன்பே அசதியில் அயர்ந்தான்..!
Discussion about this post